Wednesday, July 02, 2014

FOLK Tamil song depicting drought or NO RAIN situation.

ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம்
பின்னப் பட்டுநிக்கிறாங்க
அந்தக் குறை கேட்டு
வந்திறங்கு வர்ணதேவா
மேழி பிடிக்கும் தம்பியெல்லாம்
முகஞ் சோந்து நிக்கிறாங்க
அந்தக் குறை கேட்டு
வந்திறங்கு வர்ண தேவா,
காட்டுத் தழை பறித்து
கையெ்ல்லாம் கொப்புளங்கள்
கடி மழை பெய்யவில்லை
கொப்புளங்கள் ஆறவில்லை.
வேலித் தழைபறித்து
விரலெல்லாம் கொப்புளங்கள்
விரைந்து மழை பெய்யவில்லை
வருத்தங்கள் தீரவில்லை,
மானம் விடிவதெப்போ,
எங்க மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ?
ஓடி வெதச்ச கம்பு
ஐயோ ! வருண தேவா
ஊடுவந்து சேரலையே
பாடி வெதச்ச கம்பு
ஐயோ வருண தேவா
பானைவந்து சேரலையே.

No comments:

Post a Comment