Friday, December 30, 2011

சென்னையிலிருந்து மாதவரம் வழியாக காலை 8.20க்கு திருச்சி செல்லும் ரயில் ரத்தாகியுள்ளது. அதேபோல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாக காலை 9.20க்கு சென்னை செல்லும் ரயிலும் ரத்தாகியுள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து காலை 5.30க்கு சென்னை வரவேண்டிய ரயில் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு புறப்பட்ட ரயில் பாதிவழியில் செங்கல்பட்டிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு காலை எட்டுமணிக்கு புறப்பட வேண்டிய இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து 12.45 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து காலை 6.30மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் அரியலூரில் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் மீண்டும் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment